நீதி வழங்கலில் ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்கான முதலாவது தர வரிசையில் 18 பெரிய - நடுத்தர மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இப்பட்டியலின் இந்தப் பிரிவில் ஜார்க்கண்ட், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
ஏழு சிறிய மாநிலங்களைக் கொண்ட பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது.
இந்தத் தகவல்கள் அனைத்தும் இந்திய நீதி அறிக்கை 2019 என்ற அறிக்கையின் படி கூறப் பட்டுள்ளன.
இந்த அறிக்கையானது சமூக நீதி மையம், காமன் காஸ் மற்றும் காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு ஆகியவற்றுடன் இணைந்து டாடா அமைப்பால் வெளியிடப் பட்டது.
காவல் துறை, நீதித் துறை, சிறைச் சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகிய நான்கு துறைகளில் உள்ள முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்த அறிக்கை கவனம் செலுத்துகின்றது.