நீரியல் இயக்க விசைச் சுழலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சுமார் 185 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய என்று திரிபுரா அரசு 10 நதி தளங்களை அடையாளம் கண்டுள்ளது.
நீரியல் இயக்க விசைச் சுழலி தொழில்நுட்பம் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் போன்ற பாயும் நீரின் இயக்க ஆற்றலில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
இந்தச் சுழலிகள் அணைகள் அல்லது சேமிக்கப்பட்ட நீர் எதவும் இல்லாமல் செயல் படுகின்றன என்பதோடு மேலும் நேரடியாக நதி ஓடையில் வைக்கப்படுகின்றன.
இங்கு பாயும் நீர் ஆனது சுழலியின் தகடுகளைச் சுழற்றும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது என்பதோடு இது இயக்க ஆற்றலை மின்சாரமாக மாற்றுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் குறைந்தபட்சச் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நீர்த் தேக்க அமைப்புகளால் நிலம் மூழ்குவதற்கு வழிவகுக்காது.