இந்திய எஃகு ஆணையம் லிமிடெட் (SAIL) ஆனது, பிப்ரவரி 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான காலத்திற்கான "பணிபுரிய சிறந்த இடம்" சான்றிதழைப் பெற்றுள்ளது.
SAIL நிறுவனம் இந்தச் சான்றிதழைப் பெறுவது இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகும்.
இந்தச் சான்றிதழ், பணியாளர்களின் கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைக் குறியீட்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் Great Place to Work Institute மூலம் வழங்கப்படுகிறது.
SAIL ஒரு மகாரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமாகும்.