தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் தலைநகரமான ராய்காட்டில் ஒரு 'யந்திரராஜ்' முற்கால உயர்வு மானியைக் (ஜோதிட மானி) கண்டு அறிந்து ள்ளனர்.
அந்த ஜோதிடமானியின் மேற்பரப்பின் மையத்தில் ஆமை அல்லது பாம்பை ஒத்த இரண்டு விலங்கு உருவத்தினைக் குறிக்கும் வேலைப்பாடுகள் உள்ளிட்ட சில கல் வெட்டுகள் உள்ளன.
இதில் "முக்" மற்றும் "பூஞ்ச்" என்று பொறிக்கப்பட்ட சொற்கள் தலை மற்றும் வால் என்ற நிலைகளைக் குறிக்கின்றன என்பதோடு இது வடக்கு-தெற்கு ஆகிய நோக்கு நிலைகளை தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
ஒரு செவ்வக வடிவிலான இந்தக் கருவியில் சமஸ்கிருத மொழியிலும் தேவநகரி எழுத்துக்களிலும் இந்தக் கல்வெட்டுகள் உள்ளன என்பதோடு இது சாகா ஆண்டு 1519, அதாவது 1597 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
1656 ஆம் ஆண்டில் ராய்காட் புதுப்பிக்கப்பட்ட நேரத்திலும், 1674 ஆம் ஆண்டில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முடி சூடப்பட்ட நேரத்திலும் இது பயன்படுத்தப்பட்டது.