TNPSC Thervupettagam

பருப்பு வகைகளில் தன்னிறைவு பெறுதலுக்கான திட்டம்

October 4 , 2025 15 days 64 0
  • 11,440 கோடி ரூபாய் மொத்த செலவில் பருப்பு வகைகளில் தன்னிறைவு பெறச் செய்வதற்கான ஆறு ஆண்டு காலத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து ள்ளது.
  • 2030–31 ஆம் ஆண்டிற்குள் 350 லட்சம் டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்து 310 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு உற்பத்தியினை பரப்புவதே இத்திட்டத்தின் இலக்காகும்.
  • பிரதான் மந்திரி அன்னதாதா ஆய் சன்ரக்சன் அபியான் (PM-AASHA) திட்டத்தின் விலை ஆதரவு திட்டத்தின் (PSS) கீழ் துவரை பருப்பு, உளுந்து மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் முழு கொள்முதல் ஆனது மேற்கொள்ளப்படும்.
  • மொத்தம் 126 லட்சம் குவிண்டால் அளவிலான சான்றளிக்கப்பட்ட விதைகளும் 88 லட்சம் இலவச விதைப் பெட்டிகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
  • ஓர் அலகிற்கு 25 லட்சம் ரூபாய் வரையிலான மானியத்துடன் 1000 அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்துதல்/செயலாக்க அலகுகள் நிறுவப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்