இந்தியாவின் பருவமழைத் திரளில் சுமார் 25% தரையைத் தொடுவதற்கு முன்பே நடுவானில் ஆவியாகிறது.
இது புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வாகும்.
நடுவானில் ஏற்படும் இந்த இழப்பானது, சுற்றுப்புற வெப்பநிலை, வெப்பம் மற்றும் வறண்ட காற்று போன்ற உள்ளூர் வளிமண்டலக் காரணிகளால் முதன்மையாக நிர்ணயிக்கப்படுகிறது.
நடுவானில் ஏற்படும் சராசரி இழப்பு 25% ஆக இருந்தாலும், துல்லியமான ஆவியாதல் விகிதம், சுற்றுப்புற வானிலை நிலைகளைப் பொறுத்து, நாளுக்கு நாள் 4% முதல் 61% வரை பெருமளவில் மாறுபடுகிறது.
நீர் ஆவியாகும் போது, இலகுவான நீர் மூலக்கூறுகள் முதலில் காற்றில் வெளியேறுகின்றன.
இதனால், விழும் மீதமுள்ள மழைத்துளியில் கனமான ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஐசோடோப்புகள் அதிக அளவில் செறிந்து காணப்படுகின்றன.
இந்தியாவின் 25% நடுவான ஆவியாதல் விகிதமானது, உலகளாவிய அடிப்படை அளவுகளின் கீழ் எல்லையில் உள்ளது.
இந்த முதன்மை அளவீடுகள் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் புனே பகுதிகளில் சேகரிக்கப் பட்டன.