இது குஜராத்தின் ரத்வா பழங்குடி சமூகத்தினரின் பல நூற்றாண்டுகள் பழமையான சுவர் ஓவியப் பாரம்பரியமாகும்.
இது முக்கியமாக பஞ்சமஹால் மற்றும் சோட்டா உதய்பூரில் காணப்படுகிறது.
இது சுமார் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது - ரத்வா, பில் மற்றும் பிலாலா போன்ற பழங்குடியினரால் வரையப்பட்டது.
இது வீடுகளின் சுவர்களில் உருவாக்கப்பட்டது.
திருமணங்கள், பிறப்புகள் மற்றும் பண்டிகைகள் போன்ற வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளின் போது இந்த ஓவியங்கள் பெரும்பாலும் வரையுமாறு பணிக்கப்பட்டன.
பட்வா என்றழைக்கப்படும் ஒரு பூசாரியின் வழிகாட்டுதலின் கீழ், லக்கராக்கள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஓவியர்களால் இவை வரையப்பட்டன.
பசுவின் சாணம் மற்றும் களிமண் கலவையைப் பூசி சுவர்கள் தயார் செய்யப் படுகின்றன.
கலைஞர்கள் தங்கள் ஓவியங்களுக்கான வண்ணங்களை உருவாக்க, கனிமங்கள், தாவரங்கள் மற்றும் பிற கரிமப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட இயற்கை நிறமிகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஓவியர்கள் மூங்கில் குச்சிகள், பருத்தி மற்றும் மர அச்சுகள் ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த ஓவியங்கள் பழங்குடியினர் மற்றும் இந்து தெய்வங்கள், குதிரைகள், விலங்குகள் மற்றும் விவசாயம், வேட்டையாடுதல், நடனம் போன்ற அன்றாட வாழ்க்கைக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன.
சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகியவை பொதுவான வண்ணங்களாகும்; இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இயற்கை மூலங்களிலிருந்து பெறப்பட்டவை.
இன்றைய பித்தோரா ஓவியர்கள் தாங்கள் வணிகரீதியாக விற்கும் காகிதம் மற்றும் கேன்வாஸை / கித்தானைப் பயன்படுத்துகின்றனர்.