பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 8வது தவணைத் தொகையானது சமீபத்தில் வழங்கப் பட்டுள்ளது.
இந்திய அரசானது சிறு மற்றும் குறு விவசாயிகளின் கணக்கில் 6000 ரூபாய் தொகையினை செலுத்துகிறது.
இந்த நிதியானது மூன்று தவணைகளாக செலுத்தப் படுகிறது.
முதல் தவணையான 2000 ரூபாயானது ஏப்ரல் முதல் ஜுன் இடையிலான காலக் கட்டத்திலும், இரண்டாவது தவணையானது ஆக்ஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலக் கட்டத்திலும் மூன்றாவது தவணையானது டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலக் கட்டத்திலும் வழங்கப் படுகிறது.
இந்தத் திட்டமானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.