பிரதமரின் பரிக்சா பே சர்ச்சா (PPC) இயக்கமானது, குடிமக்கள் ஈடுபாட்டுத் தளத்தில் ஒரு மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பதிவு செய்யப்பட்டதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தது.
இந்தத் திட்டத்தின் எட்டாவது இயக்கமானது 3.53 கோடி என்ற அளவில் செல்லுபடி ஆகும் பதிவுகளைப் பெற்றது.
PPC திட்டமானது தேர்வு சார்ந்த மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நேர்மறையான கற்றலை ஊக்குவிப்பதற்காகவும் என்று பிரதமர் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதை உள்ளடக்கியது.
இந்த முன்னெடுப்பானது தேர்வுப் பருவத்தை நேர்மறை, ஆக்கப்பூர்வமான மற்றும் நோக்கமுள்ள கற்றலின் திருவிழாவாக மாற்றுகிறது.
PPC நிகழ்வின் முதல் இயக்கமானது 2018 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
எட்டாவது இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன், குத்துச்சண்டை வீரர் MC மேரி கோம் மற்றும் ஆன்மீகத் குரு சத்குரு போன்ற பிரபலங்கள் இடம் பெற்றிருந்தனர்.