TNPSC Thervupettagam

பிரதான் மந்திரி ரோஜ்கார் புரோத்சகான் யோஜனா

January 16 , 2019 2393 days 702 0
  • வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் தனித்துவ திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி புரோத்சகான் யோஜனா 2019-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி அதன் பயனாளிகளின் எண்ணிக்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லான ஒரு கோடி என்ற எண்ணிக்கையைக் கடந்திருக்கின்றது.
  • இத்திட்டம் 2016-ம் அண்டு ஆகஸ்டு மாதம் 7-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் தொழிலாளர்களின் சேமநல நிதி நிறுவனத்தின் (Employees’ Provident Fund Organization - EPFO) மூலமாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தால் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • இத்திட்டத்தின் நேரடியான பயன் என்பது யாதெனில் இத்திட்டத்தின் பயனாளிகளான தொழிலாளர்கள் சேமநல நிதி, ஓய்வூதியம் மற்றும் மரணத்தோடு தொடர்புடைய காப்பீடு ஆகியவற்றின் மூலம் சமூகப் பாதுகாப்பு நன்மைகளை அடைய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்