பிரதிபா சேது என்பது ஒன்றியக் குடிமைப் பணியாளர் ஆணையத்தினால் (UPSC) தொடங்கப் பட்ட ஒரு மையப்படுத்தப்பட்ட எண்ணிம தளமாகும்.
பிரதிபா சேது என்பது 'தொழில்முறை வளம் மற்றும் திறமை ஒருங்கிணைப்பு – அரசுப் பணி ஆர்வலர்களை பணியமர்த்தச் செய்வதற்கான இணைப்புப் பாதை' என்பதைக் குறிக்கிறது.
இது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்டது.
தகுதி வாய்ந்த ஆனால் பணிக்குப் பரிந்துரைக்கப்படாத தேர்வர்களின் தனிப்பட்ட சுய விவரங்களைப் பகிர்ந்து கொள்வதை மிகவும் எளிதாக்குவதன் மூலம் திறமைக்கும் வாய்ப்புக்கும் இடையிலான ஒரு இடைவெளியைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தேர்வர் சுயவிவரங்கள் ஆனது அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலாளிகளுக்கு சாத்தியமான பணிச் சேர்ப்புக்காக என அணுகக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளன.
பிரதிபா சேது என்பது முந்தையப் பொதுத் தகவல் வெளிப்படுத்தல் திட்டத்தின் (PDS) மறுபெயரிடப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) முடிவைத் தொடர்ந்து PDS ஆனது 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ் UPSC பரிந்துரைக்கப்படாத ஆனால் விருப்பத்தைக் கொண்டு உள்ள தேர்வர்களின் சுய விவரங்களைப் பொது வெளியில் பகிரத் தொடங்கியது.
இப்புதிய தளம் ஆனது, CSE தேர்வு நிலைகளில் தேர்ச்சி பெற்றாலும் இறுதிப் பட்டியலில் இடம் பெறாத தேர்வர்களுக்கு நவீன திறமை ஒருங்கிணைப்புப் பாலமாக செயல்படும்.