நோய்த் தொற்றுகள் குறித்த முன் எச்சரிக்கைகளை வழங்க தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (NCDC) குடிமக்கள் சார்ந்த அறிக்கையிடல் முறையை அறிமுகப் படுத்தியது.
சுகாதார அமைச்சகம் மற்றும் NCDC வழங்கிய விரைவு துலங்கல் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அசாதாரண சுகாதார நிகழ்வுகள் குறித்து மக்கள் இதில் புகாரளிக்கலாம்.
ஒவ்வோர் அறிக்கையும் ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) கீழ் உள்ள மாவட்ட, மாநில மற்றும் தேசிய முகப்புப் பக்கங்களுக்கு உடனடியாக அனுப்பப் படும்.
பயனர் தரவைப் பாதுகாப்பதற்காக இந்த அமைப்பானது, பாதுகாப்பான அரசு சேவையகங்கள் மற்றும் இணைய வெளிப் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பயன்படுத்துகிறது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நாடு தழுவிய அளவில் அறிமுகப் படுத்தப் பட்டதிலிருந்து சுமார் 100 சரிபார்க்கப்பட்ட அறிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப் பட்டிருந்தாலும், நோயாளிகள் சுகாதார மையங்களை அடைவதற்கு முன்னதாகவே தொற்றுக்களைக் கண்டறிவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.