ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA), ஆற்றல் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக புரோபா-3 திட்டத்தின் கொரோனாகிராப் செயற்கைக்கோளுடனான தொடர்பை இழந்தது.
சூரியனின் வெளி வளிமண்டலத்தை (கொரோனா) ஆய்வு செய்வதற்கான உலகின் முதல் துல்லியமான அணிவகுப்புப் பறப்பு விண்கலத் திட்டம் இதுவாகும்.
இது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இஸ்ரோவின் PSLV-C59 ஏவுகணை மூலம் ஏவப் பட்டது.
இந்தத் திட்டம் கொரோனாகிராப் (புகைப்படமெடுக்கும் கருவி) மற்றும் அக்குல்டர் (செயற்கை கிரகணத்தை உருவாக்க சூரியனை மறைக்கும் கருவி) ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களைப் பயன்படுத்துகிறது.
செயற்கைக்கோள்கள் மற்றும் மின் கட்டமைப்புகளைப் பாதிக்கும் சூரியக் காற்று மற்றும் சூரிய ஒளிவட்டப் பொருள் உமிழ்வுகள் (CMEs) ஆகியவற்றை ஆய்வு செய்ய இது உதவுகிறது.