TNPSC Thervupettagam
March 15 , 2026 14 hrs 0 min 43 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA), ஆற்றல் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக புரோபா-3 திட்டத்தின் கொரோனாகிராப் செயற்கைக்கோளுடனான தொடர்பை இழந்தது.
  • சூரியனின் வெளி வளிமண்டலத்தை (கொரோனா) ஆய்வு செய்வதற்கான உலகின் முதல் துல்லியமான அணிவகுப்புப் பறப்பு விண்கலத் திட்டம் இதுவாகும்.
  • இது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இஸ்ரோவின் PSLV-C59 ஏவுகணை மூலம் ஏவப் பட்டது.
  • இந்தத் திட்டம் கொரோனாகிராப் (புகைப்படமெடுக்கும் கருவி) மற்றும் அக்குல்டர் (செயற்கை கிரகணத்தை உருவாக்க சூரியனை மறைக்கும் கருவி) ஆகிய இரண்டு செயற்கைக் கோள்களைப் பயன்படுத்துகிறது.
  • செயற்கைக்கோள்கள் மற்றும் மின் கட்டமைப்புகளைப் பாதிக்கும் சூரியக் காற்று மற்றும் சூரிய ஒளிவட்டப் பொருள் உமிழ்வுகள் (CMEs) ஆகியவற்றை ஆய்வு செய்ய இது உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்