இந்தியத் தொழிற்சாலைகளில் நேரடியாகப் பணிபுரியும் பெண்களில் 40% தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இது சீனாவின் பெண்கள் தலைமையிலான மின்னணு உற்பத்தி மாதிரியைப் பின்பற்றுகிறது.
பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (LFPR) கோயம்புத்தூர் (41.3%) மற்றும் மதுரை (37%) ஆகிய நகரங்கள் முதல் 3 இந்திய நகரங்களில் இடம் பிடித்துள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நகரங்களும் நகர்ப்புற இந்தியாவின் சராசரியான 27.7%-ஐ விட கணிசமாக அதிகமாக உள்ளன.
கணினிகள், மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பொருட்கள் உற்பத்தியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பெண்களின் வேலைவாய்ப்புப் பங்கில் சரிவு காணப்பட்டது.
இந்தியாவின் தொழிற்சாலைகளில் நேரடியாகப் பணியமர்த்தப்பட்ட அனைத்துப் பெண்களின் சதவீத அடிப்படையில் – அவர்கள் என்ன உற்பத்தி செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் – மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இது பெரும்பாலும் இந்த முன்னிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது; இதன் பங்கு 2021-22 ஆம் ஆண்டில் 43%லிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 40% ஆக ஒரு சிறிய சரிவை மட்டுமே காட்டுகிறது.
கணினி, மின்னணுவியல் மற்றும் ஒளியியல் உற்பத்தியில் மாநிலத்தில் பெண்களின் பங்கு ஒரு தசாப்தத்திற்குள் 20%லிருந்து 43% ஆக உயர்ந்துள்ளது.
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது ஏற்கனவே பணியில் உள்ள அல்லது வேலை தேடும் நபர்களின் சதவீதத்தைக் குறிக்கிறது.