2018-20 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் (MMR) 97 ஆக இருந்தது.
2014-16 ஆம் ஆண்டில், 130 ஆக இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதமானது, அதன்பின் நிலையான வகையிலான ஒரு சரிவைக் கண்டது.
ஒரு பிராந்தியத்தில் பதிவாகும் பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் என்பது அந்தப் பகுதியில் உள்ள பெண்களின் பேறு காலம் சார்ந்த ஆரோக்கியத்தின் ஒரு மதிப்பீடு ஆகும்.
இது ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளின் போது ஏற்படும் கர்ப்பிணிகளின் இறப்பாகும்.
இந்திய மாநிலங்களில், அசாம் அதிகபட்சமாக 195 பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதத்துடனும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (173) மற்றும் உத்தரப் பிரதேசம் (167) ஆகிய மாநிலங்களும் இடம் பெற்றுள்ளன.
கேரளாவில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் (19) மிகக் குறைவாக உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 33 ஆகவும், தெலுங்கானா மாநிலத்தில் 43 ஆகவும் அது பதிவாகியுள்ளது.