TNPSC Thervupettagam

பொது தனியார் கூட்டமைப்பு அடிப்படையிலான முதல் ஆராய்ச்சி உலை

May 30 , 2021 1522 days 614 0
  • அணுசக்தி துறையானது (Department of Atomic Energy – DAE) பொதுதனியார் கூட்டமைப்பு அடிப்படையிலான நாட்டின் முதல் ஆராய்ச்சி உலை ஒன்றினை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • பாபா அணு ஆராய்ச்சி மையத்தினால் வடிவமைக்கப்பட உள்ள இந்த ஆராய்ச்சி உலையானது ரேடியோ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்யும்.
  • இதனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப் படும் அணுசக்தி மருந்துகளின் விலையானது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அணுசக்தித் துறையானது இதற்கான மூலதனத்தை வழங்கி தனது துணை அமைப்பான இந்திய அணுசக்தி கழகத்தின் மூலம் இந்த ஆலையினைக் கட்டமைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்