பிரதமர் அசாமில் ‘மகாபாஹு-பிரம்மபுத்ரா’ திட்டத்தை இணையவழியில் தொடங்கி வைத்தார்.
ரோ-பாக்ஸ் கப்பல் நடவடிக்கைகளின் தொடக்கமானது மகாபாஹு-பிரம்மபுத்ரா திட்டத்தின் துவக்கத்தைக் குறிப்பிடுகிறது.
ரோ-பாக்ஸ் கப்பல் நடவடிக்கைகள் நீமதிகாட் & மஜூலி, துப்ரி-ஹட்சிங்கிமாரி மற்றும் வடக்கு-தெற்கு குவஹாத்தி ஆகிய இடங்களுக்கு இடையே தொடங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஜோகிகோபாவில் உள்ள உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து நிலையத்தின் தொடக்கமும் அடங்கும்.
மேலும் அவர் துப்ரி புல்பாரி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அசாமில் உள்ள துப்ரியை மேகாலயாவில் உள்ள புல்பாரி, துரா, ரோங்கிராம் மற்றும் ரோங்ஜெங் ஆகியவற்றுடன் இணைக்கும் வகையில் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது இது கட்டப்படும்.
அசாமில் மஜூலி பாலம் கட்டுவதற்காக வேண்டி அவர் பூமி பூஜையையும் செய்தார்.