TNPSC Thervupettagam

மக்களவை விரிவாக்க முன்மொழிவு

April 16 , 2026 12 hrs 0 min 64 0
  • அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மக்களவை தொகுதி களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 இடங்களாக விரிவுபடுத்த இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.
  • மக்கள் தொகை வளர்ச்சியைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில், மாநிலங்களுக்கு 815 இடங்களும், ஒன்றியப் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் இந்த முன்மொழிவில் அடங்கும்.
  • இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதோடு தொடர்புடையது.
  • தொகுதி மறுவரையறைக்குப் பிறகு 2029 பொதுத் தேர்தலிலிருந்து இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
  • தொகுதி மறுவரையறையானது மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை மீண்டும் வரையறுக்கும், இதில் 2011 ஆம் ஆண்டு அல்லது புதுப்பிக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துவது குறித்து விவாதம் நிலவுகிறது.
  • அரசியலமைப்பின் 81-வது சரத்து ஆனது மக்களவையின் இயைபு மற்றும் இட ஒதுக்கீட்டை வரையறுக்கிறது.
  • கடைசியாக 2002 ஆம் ஆண்டில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.
  • இந்த முன்மொழிவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்