TNPSC Thervupettagam

மக்கள் தொகை எண்ணும் கட்டம் 2027

September 9 , 2026 4 days 100 0
  • 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் மக்கள் தொகை எண்ணும் கட்டமானது தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது, அதே வேளையில் மணிப்பூரில் இந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 16 முதல் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து ஜனவரி 5–9 ஆம் தேதி வரை மறுபரிசீலனைச் சுற்று நடைபெறும்.
  • இரண்டாம் கட்டத்தில், சாதிப் பிரிவு உட்பட 40 கேள்விகள் இடம்பெறும்; 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது குறைந்தது 13 கேள்விகள் புதியவை.
  • புதிய கேள்விகளில் குடியுரிமை, பெற்றோரின் விவரங்கள், வாழ்க்கைத் துணைவரின் பெயர், டிஜிட்டல் எழுத்தறிவு, நிரந்தர முகவரி, கோவிட்-19 தடுப்பூசி, வங்கிக் கணக்குகள், கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், அலைபேசி, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை அடங்கும்.
  • டிசம்பர் 1 அன்று வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு முன், 2026 ஆம் ஆண்டு நவம்பர் 16–30 ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பு வசதி கிடைக்கப் பெறும்; இந்த நான்கு மாநிலங்களுக்கான குறிப்புத் தேதி 2027 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி ஆகும்.
  • மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளன; செப்டம்பர் 1–30 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த அதன் முதற்கட்டம், போராட்டங்கள் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) கோரிக்கைகளுக்குப் பிறகு நிறுத்தப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்