ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியமானது (UNFPA) இளைஞர்களின் அபிலாஷைகள், உறவுகள் மற்றும் குடும்ப முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் 'வாழ்க்கை, தேர்வுகள் மற்றும் எதிர்காலம் — மக்கள்தொகை எதிர்காலக் கணிப்பு அறிக்கை 2026'-ஐ வெளியிட்டது.
உலகளாவிய இக்கணக்கெடுப்பு 73 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இணைய வசதி கொண்ட 108,926 இளைஞர்களை (18-39 வயது) உள்ளடக்கியது.
பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்டோர் திருமணத்தை உள்ளடக்கிய ஒரு குடும்ப அமைப்பை விரும்பினர், இது குடும்ப வாழ்க்கை மீதான தொடர்ச்சியான ஆர்வத்தைக் காட்டுகிறது.
நிதிப் பாதுகாப்பு (81%) மற்றும் நிலையான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதி ஆகியவை கூட்டு மற்றும் பெற்றோருக்கான முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.
இந்தியாவில், 18 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒரு குடும்பத்திற்கு 2.1 குழந்தைகள் இருப்பதே சிறந்தது என்று குறிப்பிட்டனர்; ஆனால், 35 முதல் 39 வயதுக்கு உட்பட்ட பெண்களிடையே காணப்பட்ட உண்மையான சராசரி எண்ணிக்கை 1.0 குழந்தையாகவே இருந்தது.
பெற்றோராகும் விருப்பம் குறைவதைக் காட்டிலும், பொருளாதாரச் சவால்கள், வீட்டு வசதிக்கான செலவுகள், வேலைவாய்ப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் போதுமான ஆதரவு அமைப்புகள் இல்லாமை ஆகியவையே கருவுறுதல் விகிதம் குறைவதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன என்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.