இந்தியக் கடற்படை 'மச்சிலிப்பட்டினம்' எனும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு மற்றும் ஆழமற்ற நீர்நிலைப் போர் நடவடிக்கைகளுக்கான கப்பலை (ASW SWC) அறிமுகப் படுத்தியது.
இது கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மச்சிலிப்பட்டினத்தின் (ஆந்திரப் பிரதேசம்) செழுமையான கடல்சார் பாரம்பரியத்தை இக்கப்பலின் பெயர் பிரதிபலிக்கிறது.
கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் – அதாவது நீருக்கடியில் கண்காணிப்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர், கண்ணிவெடி தொடர்பான போர் நடவடிக்கைகள் மற்றும் குறைந்த தீவிரத்தன்மை கொண்ட செயல்பாடுகள் ஆகியவை இதன் இலக்குகளாகும்.