TNPSC Thervupettagam

மன்னத்து பத்மநாபன் நினைவிடம்

July 19 , 2026 8 days 49 0
  • சமூகச் சீர்திருத்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான மன்னத்து பத்மநாபனின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார் மற்றும் புதுடெல்லியின் துவாரகாவில் மன்னம் ஸ்மிருதி மண்டபத்தையும் அவர் திறந்து வைத்தார்.
  • அவரது பங்களிப்புகளைக் கௌரவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள நாயர் சேவை சங்கம் (NSS), மன்னம் சர்வதேச மையத்தில் இந்த நினைவிடத்தை அமைத்துள்ளது.
  • மன்னத்து பத்மநாபன் (1878–1970) ஒரு முக்கிய சமூக சீர்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் நாயர் சேவை சங்கத்தை (NSS) நிறுவியவர் ஆவார்.
  • கேரளாவில் உள்ள நாயர் சமூகத்தினரிடையே கல்வி, சமூக நலம் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காக 1914 ஆம் ஆண்டில் அவர் NSS ஐ நிறுவினார்.
  • சமூக சீர்திருத்தம், ஏற்றத்தாழ்வுகளை அகற்றுதல், கல்வி மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்காக அவர் பணியாற்றினார்.
  • சமூகப் பாகுபாடு மற்றும் கோவில் சாலைகளுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகளுக்கு எதிரான முக்கிய இயக்கமான வைக்கம் சத்தியாகிரகத்தில் (1924-1925) அவர் பங்கேற்றார்.
  • நாயர் சேவை சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய அவர், கல்வி மற்றும் சமூக நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்காற்றினார்.
  • அவர் "மன்னம்" என்று பிரபலமாக அழைக்கப்பட்டார் என்பதோடு மேலும் கேரளாவின் சமூக மறுமலர்ச்சியின் தலைவராக நினைவுகூரப்படுகிறார்.
  • அவரது சுயசரிதையான “என்றே ஜீவித ஸ்மரணகள்” (எனது வாழ்க்கை நினைவுகள்) அவரது வாழ்க்கை மற்றும் சமூகப் பணிகள் குறித்த நுண்ணறிவுகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்