TNPSC Thervupettagam

மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளுக்கு ஒப்புதல்

November 4 , 2022 993 days 459 0
  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளுக்கு இந்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
  • சமீபத்திய இந்த முடிவானது, இந்த முதல் வகையிலான மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிரின் வணிகப் பயன்பாட்டிற்கு வழி வகுத்துள்ளது.
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பான மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவானது மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளுக்கு 2017 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கியது.
  • ஆனால் இந்திய அரசாங்கம் அது தொடர்பான கேள்விகளை எழுப்பி மேலும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தச் செய்ததால் அந்தச் செயல்பாடுகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு காலம் தேவைப்பட்டது.
  • தற்போது, ​​அரசாங்கம் இதற்கான அவசிய இறுதி அனுமதி அளித்தாலும், விவசாயிகள் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளை வணிகம் சார்ந்தப் பயன்பாடுகளுக்குப் பயிரிடுவதற்கு இறுதி அனுமதியைப் பெறுவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்