மாநிலங்களவை தனது அவையின் சுமூகமான செயல்பாட்டிற்காக துணைத் தலைவர்கள் குழுவை மறுசீரமைத்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தினேஷ் சர்மா, எஸ். பாங்னான் கொன்யாக், கன்ஷியாம் திவாரி, பூலோ தேவி நேதம், மு. தம்பிதுரை மற்றும் சஸ்மித் பத்ரா உட்பட ஆறு உறுப்பினர்கள் இதற்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.
தலைவர் மற்றும் துணைத் தலைவர் இல்லாத நேரங்களில் இக்குழுவின் உறுப்பினர்கள் அவைக்குத் தலைமை தாங்கி, விவாதங்களையும் ஒழுங்கையும் நிர்வகிப்பார்கள்.
மாநிலங்களவையின் தலைவர் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஆவார், மேலும் துணைத் தலைவர் இந்த அவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
இக்குழு நிரந்தரமான அரசியலமைப்புப் பதவி அல்ல, உறுப்பினர்கள் சுழற்சி மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.
இந்த அமைப்பு நாடாளுமன்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சி, நெகிழ்வுத் தன்மை மற்றும் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்கிறது.