மாநிலப் பேரிடர் நிவாரண நிதி
May 4 , 2021
1537 days
820
- நிதி அமைச்சகம் சமீபத்தில் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் முதல் தவணையை வழங்கியுள்ளது.
- நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, இந்த நிதியானது 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் வழங்கப்பட இருந்தது.
- தற்போது இந்த நிதியானது முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது.
- 2021-22 ஆம் ஆண்டிற்காக வழங்கப்படும் மொத்த மாநிலப் பேரிடர் நிவாரண நிதித் தொகை ரூ.8,873 கோடியாகும்.
- நிதி அமைச்சகமானது இந்த நிதியின் 50% தொகையினை அதாவது ரூ.4,436.8 கோடியினை மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது.
- மாநிலப் பேரிடர் நிவாரண நிதியானது 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
Post Views:
820