2025-26 ஆம் ஆண்டிற்காக என மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தினைத் (MISS) தொடர்வதற்கு மத்திய அரசு அங்கீகரித்தது.
MISS என்பது 2006–07 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு மத்திய அரசின் திட்டமாகும்.
இந்த MISS திட்டத்தின் கீழ், தகுதியான கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்கப்படுவதுடன் விவசாயிகள் கிசான் கடன் அட்டையின் மூலம் 3 லட்சம் ரூபாய் வரை குறுகிய கால கடன்களை 7% மானிய வட்டி விகிதத்தில் பெறுகிறார்கள்.
கூடுதலாக, கடன்களை உடனடியாகத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகள் உடனடியாக திருப்பிச் செலுத்துவதற்கான ஊக்கத் தொகையாக (PRI) 3% வரையில் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
கால்நடை வளர்ப்பு அல்லது மீன்வளத்திற்காக வேண்டி பிரத்தியேகமாகப் பெறப்பட்ட கடன்களுக்கு, வட்டி சார்ந்த பலன் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டால், மறுசீரமைக்கப்பட்டப் பயிர்க் கடன்களுக்கு முதல் ஆண்டிற்கு 2% வட்டி மானியம் வழங்கப் படுகின்றன.