TNPSC Thervupettagam

மாற்று வழியில் தீர்வு காணும் முறை (ADR)

October 9 , 2025 10 days 35 0
  • 2025 ஆம் ஆண்டின் இந்திய நீதி அறிக்கையானது, அணுகல், தாமதங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் உட்பட இந்தியாவின் நீதி வழங்கீட்டு அமைப்பில் உள்ள குறிப்பிடத் தக்க சவால்களை எடுத்துரைக்கிறது.
  • இந்திய நீதித்துறையில் தற்போது 4.57 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற நிலையில் இது நீதி வழங்குவதில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்துகிறது.
  • மாற்று வழியில் தீர்வு காணும் முறை (ADR) என்பது லோக் அதாலத்கள் மூலம் நடுவர் மன்றம், சமரசம், மத்தியஸ்தம் மற்றும் நீதித்துறை தீர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்திய அரசியலமைப்பின் 39A சரத்து ஆனது, சம நீதி மற்றும் இலவச சட்ட உதவியை கட்டாயமாக்குவதன் மூலம், ADR முறைக்கான அரசியலமைப்பு அடிப்படையை வழங்குகிறது.
  • 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் 89வது பிரிவானது, உரிமையியல் தகராறுகளைத் தீர்ப்பதற்காக ADR செயல்முறைகளைப் பயன்படுத்துவதை அங்கீகரித்து ஆதரிக்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட நடுவர் மன்றம் மற்றும் சமரசச் சட்டம், 1996 ஆனது, அதிகபட்சமாக 180 நாட்களுக்குள் தகராறுகளைத் தீர்க்க வேண்டும் என்று கோருகிறது.
  • 1987 ஆம் ஆண்டு சட்ட சேவைகள் ஆணையங்கள் சட்டத்தினால் நிர்வகிக்கப்படும் லோக் அதாலத்கள், மேல்முறையீடு செய்வதற்கான எந்த விருப்பத் தேர்வும் இன்றி இறுதியான மற்றும் பிணைக்கப்பட்ட முடிவுகளை வழங்குகின்றன.
  • ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்