தகுதியுள்ள கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் செயல்முறையை தானியங்குபடுத்துவதற்காக, 'மின்னணு-சிறைச்சாலைகள் / E-Prisons முன்விடுதலை செயலாக்கத் தொகுதியை' செயல்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவால் (NALSA) உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதி, சென்னை புழல் மத்திய சிறையில் சோதனைத் திட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
இது முன்கூட்டியே விடுதலை பெறத் தகுதியுள்ள கைதிகளை அடையாளம் கண்டு, நான்கு மாதங்களுக்கு முன்பே அதற்கான செயல்முறையைத் தொடங்குகிறது.
இந்த அமைப்பு கைதிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் குறுஞ்செய்தி (SMS) மற்றும் வாட்ஸ்அப்/புலனம் மூலம் வழக்கமான தகவல்களை வழங்குகிறது.
இது கோப்புகளை காகிதமில்லா முறையில் டிஜிட்டல் வடிவில் செயல்படுத்துவதை சாத்தியமாக்குவதோடு இதன் மூலம் சிறை நிர்வாகத்தில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.