விசாகப்பட்டினம் எனும் இந்தியக் கடற்படைக் கப்பலில் முதலாவது மேம்பட்ட மின்னணு போர் அமைப்பான சக்தி எனும் அமைப்பானது, ஐ.என்.எஸ். விக்ராந்த் எனும் கப்பலில் நிறுவப்பட்டு வருகிறது.
‘சக்தி’ எனப்படும் மேம்பட்ட போர் அமைப்பானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இராணுவ மின்னணு ஆராய்ச்சி ஆய்வகத்தினால் வடிவமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அவை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
சக்தி என்பது இந்தியக் கடற்படையின் முதன்மையான போர்க் கப்பல்களுக்கான ஒருங்கிணைந்த ரேடார் மின்னணு போர் அமைப்பாகும்.