TNPSC Thervupettagam

மேற்கு மண்டல சபைக் கூட்டம்

September 7 , 2026 6 days 79 0
  • கோவாவின் பனாஜியில் நடைபெற்ற மேற்கு மண்டல சபையின் 28-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.
  • மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பிரச்சனைகளை விவாதிக்கவும் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956 இன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்புகள் மண்டல சபைகள் ஆகும்.
  • இந்தியாவில் வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு என 5 மண்டல சபைகள் உள்ளன.
  • மேற்கு மண்டல சபை கோவா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஒன்றியப் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இந்தச் சபையில் முதலமைச்சர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர்; ஒன்றியப் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
  • இந்தக் கூட்டம் உள்துறை அமைச்சகத்தின் மாநிலங்களுக்கு இடையேயான சபைச் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்