யுஜிசி சமத்துவ விதிமுறைகள் 2026 குறித்து உச்ச நீதிமன்றம்
February 3 , 2026 14 days 62 0
பல்கலைக்கழக மானியக் குழுவின் (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) விதிமுறைகள், 2026-ஐ நிறுத்தி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முந்தைய 2012 வழிகாட்டுதல்களே (யுஜிசி (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) விதிமுறைகள், 2012) நடைமுறையில் நீடிக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
2012 விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டிருந்ததால், நீதிமன்றம் தனது அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் பயன்படுத்தியது.
நீதிமன்ற அமர்வு இந்த விதிமுறையை 15(4)வது பிரிவின் மூலம் ஆய்வு செய்தது.
அது, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு விதிகளை உருவாக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் அபீதா சலீம் தட்வி எதிர் இந்திய யூனியன் (2019) வழக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக 2026 விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.
தற்போதைய மனுக்கள் குறிப்பாக பிரிவு 3(1)(c)-ஐ எதிர்த்து சவால் விடுத்தன.
அந்தப் பிரிவு பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான பாகுபாட்டை மட்டுமே வரையறுக்கிறது, அதன் மூலம் அது பொதுப் பிரிவினரை விலக்குகிறது.
மேலும், 2026 விதிமுறைகளில் தவறான புகார்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான எந்த வழிமுறையும் இல்லை.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதிச் சட்டத்திலிருந்து 'பின்னோக்கிச் செல்லாமை கோட்பாட்டை' உச்ச நீதிமன்றம் மேற்கோள் காட்டி, 2012 பதிப்பை விட 2026 விதிகள் ஏன் குறைந்த விதிகளை உள்ளடக்கியதாக உள்ளன என்று கேள்வி எழுப்பியது.