08.10.19 அன்று இந்தியா தனது முதலாவது பிரெஞ்சுத் தயாரிப்பு ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவைப் பொறுத்த வரையில் இது இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாகக் கருதப் படுகின்றது.
இந்த விமானமானது (இந்தியாவினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட 36 விமானங்களில் முதலாவது விமானம்) பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கால் பெற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும், இந்திய விமானப் படையானது (Indian Air Force - IAF) தனது 87வது தொடக்க தினத்தையும் இதே நாளில் கொண்டாடியது.
பிரான்ஸ், எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ரஃபேல் விமானத்தைப் பயன்படுத்தும் நான்காவது நாடு இந்தியா ஆகும்.
ரஃபேல் விமானத்தின் சேர்க்கையானது IAFற்கு மிக முக்கியமானதாகக் கருதப் படுகின்றது. IAF ஆனது மிக் -21 என்ற பைசன் ரக விமானத்தைப் பணியில் இருந்து நீக்குவதற்குத் தயாராகி வருகின்றது.
ரஃபேல் விமானத்தின் தயாரிப்பாளர் பிரெஞ்சு விமான நிறுவனமான டசால்ட் நிறுவனம் ஆகும்.