ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் “ரயில் நிலையங்களில் தூய்மை குறித்த ஆய்வு அறிக்கை” (புறநகர் மற்றும் புறநகர் அல்லாத ரயில் நிலையங்களின் தூய்மை குறித்த ஆய்வு 2019) என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆய்வு 1000 மதிப்பெண்களைக் கொண்டதாக ஒரு மூன்றாம் தரப்பு தணிக்கையாக ரயில்துறை நடத்தி இருக்கின்றது. தூய்மை மீதான தரவரிசைப் படுத்தலானது 720 ரயில் நிலையங்களில் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் புறநகர் ரயில் நிலையங்களும் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளன.
ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் துர்காபுரா ஆகியவை முதல் மூன்று தூய்மையான ரயில் நிலையங்களாகும். இந்த 3 நிலையங்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன.
முதல் மூன்று ரயில்வே மண்டலங்கள்: வடமேற்கு ரயில்வே, தென்கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே.