மேகதாது திட்டத்திற்கு மாற்றாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராசிமணல் அணை கட்ட ஒரு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த அணை 66 TMC (ஆயிரம் மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்டதாகவும், மேட்டூர் அணைக்கு மேல்புறத்தில் அமைந்திருக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 360 மெகாவாட் (MW) நீர்மின்சாரம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
1961-ஆம் ஆண்டு ராசிமணலில் அணை கட்டுவதற்கு அப்போதைய முதலமைச்சர் திரு. கே. காமராஜ் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தண்ணீர் மற்றும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே ஒரு கூட்டுத் திட்டமாக இது அமையலாம் என இந்த முன்மொழிவு பரிந்துரைக்கிறது.