லட்சத்தீவு அரசாங்கமானது, பாதுகாப்புத் தேவைகளுக்காக பித்ரா தீவைக் கையகப் படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், பித்ராவானது அத்தீவுக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப் பட்ட மூன்றாவது தீவாக மாறும்.
இத்தீவுக் கூட்டத்தில் உள்ள மற்ற இரண்டு இந்தியக் கடற்படைத் தளங்களில் ஒன்று தலைநகரான கவரட்டியில் உள்ள ஐஎன்எஸ் த்வீப்ரக்சக் ஆகும்.
மற்ற ஒன்று தென்கோடி தீவான மினிகாயில் உள்ள ஐஎன்எஸ் ஜடாயு ஆகும்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 271 குடியிருப்பாளர்களுடன், லட்சத்தீவில் உள்ள மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் பித்ரா மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்டதாக உள்ளது.