“லிட்டில் குரு” எனப்படும் சமஸ்கிருதம் கற்கும் செயலி இந்திய உயர் ஆணையத்தின் (High Commission India) இந்திரா காந்தி கலாச்சார மையத்தினால் (IGCC) வங்காள தேசத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
இந்த சமஸ்கிருதம் கற்கும் செயலியானது இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றத்தினால் (ICCR) நடத்தப்படும் பிரச்சாரத்தின் ஓர்அங்கமாகும்.
இந்த செயலி விளையாட்டு முறையில் அமைந்த உலகின் முதல் சமஸ்கிருதம் கற்கும் செயலியாகும்.
உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், சமய அறிஞர்கள், இந்திய இலக்கிய ஆசிரியர்கள் (Indologists) மற்றும் வரலாற்றாசிரியர்கள் ஆகியோரிடையே சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பதை இந்த செயலி நோக்கமாகக் கொண்டுள்ளது.