விரிவான பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கு (RCEP - Regional Comprehensive Economic Partnership) சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது.
இது சீனா தலைமையிலான உலகின் மிகப்பெரிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகும்.
இவ்வாறு செய்ததில், அதில் பங்கு பெறும் 15 நாடுகளில் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக சிங்கப்பூர் உருவெடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர குறைந்தபட்சம் ஆறு ஆசியான் மற்றும் மூன்று ஆசியான் அல்லாத உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
செயல்படுத்தப்பட்டதும், இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும், மேலும் இது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கையும், உலகப் பொருளாதாரத்தில் சுமார் 30% என்ற அளவினையும் உள்ளடக்கும்.
இந்த ஒப்பந்தம் 10 ஆசியான் பொருளாதாரங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகியவற்றை உள்ளடக்கிய பல நாடுகளின் வர்த்தக ஒப்பந்தமாகும்.
RCEP ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கையெழுத்தானது.