TNPSC Thervupettagam

மிகப்பெரிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்

April 14 , 2021 1528 days 693 0
  • விரிவான பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கு (RCEP - Regional Comprehensive Economic Partnership) சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது சீனா தலைமையிலான உலகின் மிகப்பெரிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஆகும்.
  • இவ்வாறு செய்ததில், அதில் பங்கு பெறும் 15 நாடுகளில் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக  சிங்கப்பூர் உருவெடுத்துள்ளது.
  • இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர குறைந்தபட்சம் ஆறு ஆசியான் மற்றும் மூன்று ஆசியான் அல்லாத உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • செயல்படுத்தப்பட்டதும், இந்த ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தமாகும், மேலும் இது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கையும், உலகப் பொருளாதாரத்தில் சுமார் 30%  என்ற அளவினையும் உள்ளடக்கும்.
  • இந்த ஒப்பந்தம் 10 ஆசியான் பொருளாதாரங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் தென் கொரியா ஆகியவற்றை உள்ளடக்கிய பல நாடுகளின் வர்த்தக ஒப்பந்தமாகும்.
  • RCEP ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கையெழுத்தானது.
  • இந்தியா 2019 ஆம் ஆண்டில் இதிலிருந்து விலகியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்