E9 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் ஆலோசனைச் சந்திப்பிற்கு இந்தியக் கல்வி அமைச்சர் தலைமை தாங்கினார்.
இந்த சந்திப்பு, தரமான கல்வி எனும் நீடித்த மேம்பாட்டு இலக்கு எண் 4 என்பதனை அடைவதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்த டிஜிட்டல் கல்விமுறையை அதிகரித்தல் எனும் E9 முன்னெடுப்பு பற்றியதாகும்.
ஐ.நா.வின் தலைமையில் 1993 ஆம் ஆண்டில் E9 கூட்டாண்மை முதன்முதலில் நிறுவப் பட்டது.
வங்காளதேசம், பிரேசில், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை E9 நாடுகளாகும்.
இந்த முன்னெடுப்பு நீடித்த மேம்பாட்டு இலக்கு எண் 4 என்பதற்கான செயல்பாட்டு நிரல்களை (Agenda) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு மூன்று உலகளாவிய கல்வி மாநாட்டு முன்னுரிமைகளின் உள்ள கல்வி முறைகளில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இது மேற்கொள்ளப் பட்டது.