வங்காளதேசத்திற்கான நிலம்சார் பரிமாற்றத் தளம் மூடல்
June 1 , 2025 8 days 60 0
வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குநரகமானது வங்கதேசத்திலிருந்து ஆடைகள் (ஆயத்த ஆடைகள்) ஏற்றுமதிக்காக என வங்காளதேசத்துடன் தொடர்பு கொண்டுள்ள அனைத்துப் பரிமாற்றத் தளங்களையும் மூடியுள்ளது.
வங்காள தேசத்திலிருந்து குறிப்பிட்ட சில பொருட்களை ஏற்றுமதி செய்வதை நன்கு கட்டுப்படுத்துவதற்காக வங்க தேசத்துடன் தொடர்பு கொண்டுள்ள வடகிழக்கு நிலம் சார் பரிமாற்றத் தளங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது நவ ஷேவா மற்றும் கொல்கத்தா ஆகிய இரு துறைமுகங்கள் மூலம் அனுமதிக்கப் படுகிறது.
ஆனால், இதனால் வங்காளதேசத்திலிருந்து மீன், LPG, சமையல் எண்ணெய் மற்றும் நொறுக்கப்பட்ட கல் இறக்குமதி பாதிக்கப் படாது.
இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையில் செயல்பாட்டில் உள்ள 24 நிலம் சார் பரிமாற்றத் தளங்கள் உள்ளன என்பதோடு மேலும் பல தளங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.