மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் வணிக சணல் விதை விநியோகத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்திய சணல் நிறுவனம் மற்றும் தேசிய விதைக் கழகம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்திடப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னணியில் இது தொடங்கப் பட்டது.
2021-22 ஆம் ஆண்டில் 1 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான சான்றளிக்கப்பட்ட சணல் விதைகளை வணிக ரீதியாக விநியோகிக்க இந்த 2020 ஆம் ஆண்டின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கோருகிறது.
இந்தியாவில் தங்க இழைப் புரட்சி சணல் உற்பத்தியுடன் தொடர்புடையது.