சாலை அமைப்பதற்காக உயிரி-நீலக்கீலை (Bio-Bitumen) வணிக ரீதியாக உற்பத்தி செய்த உலகின் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
உயிரி-நீலக்கீலானாது உயிரிசார் மற்றும் விவசாயக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதோடு மேலும் இது பெட்ரோலிய அடிப்படையிலான நீலக்கீலுக்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒரு மாற்றாகவும் செயல்படுகிறது.
வழக்கமான நீலக்கீல் என்பது கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் ஒரு கருப்பு நிறமான, பிசுபிசுப்பான ஹைட்ரோகார்பன் ஆகும் என்பதோடு இது சாலைகளில் பிணைப்புப் பொருளாகச் செயல்படுகிறது.
உயிரி-நீலக்கீலானாது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவுவதுடன் இந்தியாவில் காற்று மாசுபாட்டின் ஒரு முக்கிய ஆதாரமான பயிர் தாளடிகளை எரிக்கும் பிரச்சனைக்கும் தீர்வு காண்கிறது.