TNPSC Thervupettagam

வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை 2022

January 21 , 2023 939 days 476 0
  • 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை (ASER) ஆனது பிரதாம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் 97.2% ஆக இருந்த 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஒட்டு மொத்தச் சேர்க்கைப் பதிவு ஆனது 2022 ஆம் ஆண்டில் 98.4% ஆக அதிகரித்துள்ளன.
  • அரசுப் பள்ளிகளில் 2018 ஆம் ஆண்டில் 65.6% ஆக இருந்த குழந்தைகளின் சேர்க்கை விகிதமானது 2022 ஆம் ஆண்டில் 72.9% ஆக அதிகரித்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் 27.3% ஆக இருந்த, அரசு அல்லது தனியார் பள்ளிகளில் 2 ஆம் வகுப்பு பாடங்களைப் பயிலும் திறன் கொண்ட குழந்தைகள் 3 ஆம் வகுப்பில் சேராமல் இடைநின்ற குழந்தைகளின் சதவிகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 20.5% ஆக குறைந்தது.
  • 2018 ஆம் ஆண்டில் 50.5% ஆக இருந்த, அரசு அல்லது தனியார் பள்ளிகளில் குறைந்த பட்சம் 2 ஆம் வகுப்பு பாடங்களைப் பயிலும் திறன் கொண்ட குழந்தைகள் 5 ஆம் வகுப்பில் சேர்வதற்கான சதவீதம் ஆனது, 2022 ஆம் ஆண்டில் 42.8% ஆக குறைந்தது.
  • தேசிய அளவில், 2018 ஆம் ஆண்டில் 44.1% ஆக இருந்த வகுத்தல் கணக்குகளைக் கையாளக் கூடிய குழந்தைகளின் விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 44.7% ஆக சற்று அதிகரித்துள்ளது.
  • தனியார் கற்பிப்பு வகுப்புகளுக்குச் (ட்யூஷன்) செல்லும் மாணவர்களை அதிக சதவீதத்தில் கொண்டுள்ள மாநிலமாக பீகார் (71.7%) உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மணிப்பூர் (53.4%) மற்றும் ஜார்க்கண்ட் (45.3%) ஆகியவை இடம் பெற்று உள்ளன.
  • இதில் விதிவிலக்காக திகழும் மாநிலங்கள் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் திரிபுரா ஆகியனவாகும்.
  • உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், திரிபுரா ஆகியவை குறைவான வருகை விகிதம் கொண்ட மாநிலங்களாகும்.
  • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களில் 86%க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்