TNPSC Thervupettagam

விக்சித் பாரத் கா அம்ரித் கால் அறிக்கை

June 22 , 2025 10 days 45 0
  • 'விக்சித் பாரத் கா அம்ரித் கால் - சேவா, சுஷாசன் ஔர் கரிப் கல்யாண்' என்ற ஒரு தலைப்பிலான ஆவணம் ஆனது, பிரதமரின் 11 ஆண்டுகாலத்திய ஆட்சியின் கீழ் மேற் கொள்ளப் பட்ட முக்கிய சாதனைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் நிலையிலான அதன் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • 2024 ஆம் ஆண்டில் 61,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன என்ற நிலையில் இது 2018 ஆம் ஆண்டில் 14,431 கோடி ரூபாயாக இருந்தது.
  • அரசானது 2019 ஆம் ஆண்டில் 100 சதவீதம் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நாடு என்ற நிலையையும், 2025 ஆம் ஆண்டில் அனைத்து வீடுகளுக்கும் LPG இணைப்பை வழங்கிய அரசு என்ற நிலையையும் எட்டியது.
  • 81 கோடி மக்கள் இலவச உணவு தானியங்களைப் பெறுகிறார்கள், அதே நேரத்தில் சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • 15 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
  • அரசாங்கம் செயல்படுத்தியுள்ள வீட்டு வசதித் திட்டமான PMAY திட்டத்தின் கீழ் 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
  • முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் சிறு தொழில்முனைவோருக்கு சுமார் 52 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்