TNPSC Thervupettagam

விக்ஸித் கிருஷி சங்கல்ப் அபியான் 2025

June 3 , 2025 7 days 55 0
  • இது அறிவியல் ரீதியான விழிப்புணர்வு, நீடித்த நிலையான நடைமுறைகள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மூலம் இந்திய வேளாண்மையினை நவீன மயமாக்குவதற்காக தொடங்கப்பட்ட நாடு தழுவிய ஒரு பிரச்சாரமாகும்.
  • இது ஆண்டுகளுக்கு இரண்டு முறை காரீப் மற்றும் ராபி விதைப்புப் பருவங்களுக்கு முன்னதாக நடத்தப்படுகிறது.
  • பயிர் உற்பத்தி, மண் வளம் மற்றும் வள மேலாண்மையை மேம்படுத்துவது குறித்து சரியான நேரத்தில் கள அளவிலான வழிகாட்டுதலை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது, இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையின் 113 ஆராய்ச்சி நிறுவனங்கள், 731 கிருஷி விஞ்ஞான மையங்கள் (KVKs), வேளாண் பல்கலைக் கழகங்கள், மாநில வேளாண் துறைகள், விவசாயி-உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் புதுமை மிக்க விவசாயிகளை அணிதிரட்டும்.
  • இது 723 மாவட்டங்களில் 65,000க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கும் மற்றும் 1.3 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளை நேரடியாக ஈடுபடுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்