தேசியப் பாதுகாப்பு பயிற்சிக் கழகத்தின் (NDA) முதல் 17 மகளிர் படைப்பிரிவினர் புனேவின் கடக்வாஸ்லாவில் உள்ள முப்படைப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப் பட்டம் பெற்றனர்.
2021 ஆம் ஆண்டில் NDA கல்வி நிறுவனத்தில் பெண்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் (SC) உத்தரவிட்டது.
புனேவில் உள்ள NDA அமைப்பு உலகின் முதல் முப்படைப் பயிற்சிக் கழகம் ஆகும்.
இளங்கலைப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்ததற்காக வெள்ளிப் பதக்கத்தினையும், விமானப் படைத் தலைமைத் தளபதி விருதைப் பெற்ற முதல் பெண் வீரர் என்ற ஒரு பெருமையையும் ஸ்ரீதி தக்ஷ் என்பவர் பெற்றார்.