வின்ஃபாஸ்ட் எனும் வியட்நாமிய மின்சார வாகன (EV) தயாரிப்பு நிறுவனத்தினால் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் அதன் முதல் உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த ஆலையானது, 2024 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் போது கையெழுத்திடப்பட்ட 16000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.
இந்தத் திட்டமானது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 3500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஆதரவளிக்கிறது.
தூத்துக்குடி ஆலையினை தெற்காசியா, மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கான அதன் மிகப்பெரியதான ஒரு ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கு வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மின்சார வாகனங்களிலும் 40 சதவீதப் பங்கினை தமிழ்நாடு கொண்டுள்ளது.