TNPSC Thervupettagam

விலை ஆதரவுத் திட்டம் 2026 - பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல்

June 25 , 2026 4 days 89 0
  • தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) விலை ஆதரவுத் திட்டத்தின் (PSS) கீழ் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை பெரிய அளவில் கொள்முதல் செய்ய மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டின் கோடைக்காலம் மற்றும் ராபி விற்பனைப் பருவம் (RMS) 2025–26 ஆம் ஆண்டு ஆகியவற்றிற்கான பாசிப்பயறு, உளுந்து மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை இந்தக் கொள்முதல் உள்ளடக்கியது.
  • PSS திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வருமானத்தைப் பாதுகாக்கவும், விலை நிலைத்தன்மையை உறுதி செய்யவும், விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) விடக் குறையும் போது இந்திய அரசு சந்தையில் தலையிடுகிறது.
  • உத்தரப் பிரதேசம் அதிகபட்ச ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது, அங்கு ₹1,490 கோடி மதிப்பிலான பாசிப்பயறு, உளுந்து மற்றும் நிலக்கடலை கொள்முதல் செய்யப் படவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து குஜராத், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு மாநில அளவிலான கொள்முதல் வரம்புகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
  • தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் பிற அங்கீகரிக்கப் பட்ட கொள்முதல் அமைப்புகளின் மூலம் இந்திய அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்