TNPSC Thervupettagam

விவசாயிகள் தற்கொலை குறித்த தரவு

November 12 , 2019 2095 days 787 0
  • 3 ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு, தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (National Crime Records Bureau - NCRB) 2016 ஆம் ஆண்டிற்கான “விவசாயிகளின் தற்கொலைகள்” குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
  • ஆனால் இது முந்தைய பதிப்புகளிலிருந்த “தற்கொலைகளுக்கான காரணங்கள்” என்ற ஒரு முக்கியப் பிரிவை விலக்கியுள்ளது.
  • சமீபத்திய அறிக்கையானது 2016 ஆம் ஆண்டில் நாட்டில் குறைந்தது 11,379 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றது.
  • இது ஒவ்வொரு மாதமும் 948 தற்கொலைகள் அல்லது ஒவ்வொரு நாளும் 31 தற்கொலைகள் நிகழ்வதாக கூறுகின்றது.
  • நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை நிகழும் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் (2016 ஆம் ஆண்டில் 3,661 விவசாயிகள்) தொடர்ந்து விளங்குகின்றது.
  • அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்துள்ள இரண்டாவது மாநிலம் கர்நாடகா (2016 ஆம் ஆண்டில் 2,079) ஆகும்.
  • NCRB ஆனது கடன் அல்லது கடன் வாங்குவது மூலமாக ஏற்படும் திவால் ஆகியவற்றின் காரணமாக விவசாயிகளின் தற்கொலைகளை முதன்முறையாக வகைப் படுத்தியுள்ளது.
  • இந்த அமைப்பு 1995 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த தரவுகளை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, 2016 ஆம் ஆண்டுத் தரவுகளுடன் சேர்த்து இந்தியாவில் மொத்தம் 3,33,407 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
  • முதல் 5 மாநிலங்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்