நிதி ஆயோக் அமைப்பானது, "செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான செயல் திட்டம்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையானது, 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 4 மில்லியன் புதிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மூலமாக இயக்கப்படும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிடுகிறது.
இந்தியாவை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொழிலாளர் வள மையமாக மாற்றுவதற்காக தேசிய செயற்கை நுண்ணறிவுத் திறமை திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்தச் செயல் திட்டமானது AI எழுத்தறிவு, பெரிய அளவிலான மறுதிறன் பயிற்சி மற்றும் உலகளாவிய AI திறமைகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
இது AI உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம், தொழில் துறை மற்றும் கல்வித் துறை இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.