TNPSC Thervupettagam

ஸ்புட்னிக் V

April 15 , 2021 1555 days 786 0
  • ரஷ்யாவின் ஸ்புட்னிக் V எனப்படும் தடுப்பூசியினை அவசரகாலப் பயன்பாட்டிற்கு உபயோகிப்பதை அங்கீகரிக்க இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகம் (Drugs Controller General of India – DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
  • கோவிசீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகியவற்றையடுத்து இந்த தடுப்பு மருந்தானது அவசரகாலப் பயன்பாட்டிற்கு என்ற கட்டுப்பாட்டகத்தினால் அங்கீகரிக்கப் பட்ட மூன்றாவது தடுப்பூசியாகும்.
  • இதுபற்றி கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி நிர்வகிப்பு மீதான தேசிய நிபுணர் குழுவின் சந்திப்பில் (National Expert Group on Vaccine Adminsitration for Covid – 19 NEGVAC) விவாதிக்கப்பட்டது.
  • இக்குழுவின் தலைவர் நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) VK. பால் ஆவார்.
  • ஸ்புட்னிக் V தடுப்பூசியானது கடந்த ஆண்டு ரஷ்யாவினால் உருவாக்கப்பட்டது.
  • ரஷ்யாவின் தடுப்பூசியை உபயோகிக்க பதிவு செய்த அதிக மக்கட்தொகையுடைய நாடு இந்தியாவாகும்.
  • ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய 60வது நாடு இந்தியா ஆகும்.
  • ஸ்புட்னிக் V தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஒரு முன்னணி உற்பத்தி மையமாகவும் இந்தியா உள்ளது.
  • மேலும் ஹைதரபாத்தில் அமைந்துள்ள டாக்டர் ரெட்டி ஆய்வகம் என்ற மருந்து நிறுவனம், இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்குவதற்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியைப் பதிவு செய்த (ஆகஸ்ட் 2020) உலகின் முதல் நாடு ரஷ்யாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்